லட்சத்தீவில் ஐஎன்எஸ் கடற்படை தளம் : விரைவில் திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்!
Jul 24, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லட்சத்தீவில் ஐஎன்எஸ் கடற்படை தளம் : விரைவில் திறந்து வைக்கிறார் ராஜ்நாத் சிங்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் கடல் எல்லை பகுதி பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் முதல் வாரத்தில் திறந்து வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 2 மற்றும் 3-ம்   தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவு பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே மாலத்தீவு  அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் மஹ்சூம் மஜித் லட்சத்தீவு குறித்து சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மாலத்தீவு அதிபரின் பார்வை சீனாவின் மீது திரும்பியது.சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் அதிபர் முய்ஸு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வலியுறுத்தினார்.  மேலும் மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

மாலத்தீவு, அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் ஆடம்பர ஓய்வு விடுதிகளுக்கு பெயர் பெற்றது.  பாரம்பரியமாக இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாக உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக  இந்தியாவில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனையடுத்து லட்சத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐஎன்எஸ் ஜடாயுவின் வளர்ச்சியும், அதைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை அதிகரிப்பும் இந்திய சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அவர்கள் தற்போது  மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை கருதுகின்றனர்.

லட்சத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனிடையே லட்சதீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைக்கிறார்.

Tags: India Fortifies Naval BasePM ModiRajnath Singhdefence ministerMaldivesLakshadweepChinese influence
ShareTweetSendShare
Previous Post

சென்னை மெட்ரோவில் ‘Pink Squad’ அறிமுகம்!

Next Post

காஷ்மீர் : பனிக்கு பிறகு எழுச்சி பெறும் சுற்றுலா தளங்கள்!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies