சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு
Oct 22, 2025, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு

Web Desk by Web Desk
Feb 16, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பார்வையற்றோருக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், என்.பி.எஸ்.சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த சில நாளாக மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல, கோடம்பாக்கத்திலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரைக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், அவர்களுடன் பேச்சு நடத்த தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள், கடந்த திங்கட்கிழமை போராட்டம் நடத்தியபோது, மாற்றுத் திறனாளிகளை மாலையில் கைது செய்த காவல்துறை, இரவு முழுவதும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தனர். கடைசியாக அதிகாலை 4 மணிக்கு சென்னைக்கு அப்பால் 50 கி.மீ. தொலைவில் உள்ள வல்லக்கோட்டையில் இறக்கி விட்டனர் என வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில்தான், சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து கடும் நெருக்கடி ஏற்பட்டது. சாலை முழுவதும் வாகனங்கள் அணிவத்து நிற்கின்றன. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை, பதவியேற்றது முதல் புறக்கணித்து வருவதால் பல்வேறு தரப்பினரும் தி.மு.க அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Tags: protestdmk fails
ShareTweetSendShare
Previous Post

பிப்ரவரி 27-இல் கேரளா வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

சென்னை மட்டும் குடும்ப அரசியலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச் சாட்டு

Related News

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies