இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 445 ரன்கள் குவிப்பு!
Oct 23, 2025, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 445 ரன்கள் குவிப்பு!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸ், முதல் பேட்டிங் முடிவில், இந்தியா 445 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆகினார்.

தொடர்ந்து களமிறங்கிய ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 33/3 என்ற கணக்கில் இருந்தது.

அப்போது தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா – ஜடேஜா கூட்டணி மிதமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.

நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 14 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என 131 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக ஆட்டத்தில் 62 ரன்களை அசத்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்ககள் என இதுவரை 110 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 112 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் குலதீப் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய துருவ் ஜூரெல்3 சிக்சர்கள், 2 பௌண்டரீஸ் எடுத்து 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் அஸ்வின் 37 ரன்களிலும், பும்ரா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸ் முதல் பேட்டிங் முடிவில் இந்தியா 445 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மார்க்வுட் 4 விக்கெட்களை எடுத்துள்ளார். ரெஹான் அகமது 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஜோ ரூட், டாம் ஹார்ட்லீ, ஆண்டர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Tags: Indiaindia cricket teamindia vs england
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Next Post

சர்பராஸ் கானிடன் தனது வருத்தத்தை தெரிவித்த ஜடேஜா!

Related News

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

Load More

அண்மைச் செய்திகள்

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies