இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 445 ரன்கள் குவிப்பு!
Jan 14, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 445 ரன்கள் குவிப்பு!

Murugesan M by Murugesan M
Feb 16, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸ், முதல் பேட்டிங் முடிவில், இந்தியா 445 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆகினார்.

தொடர்ந்து களமிறங்கிய ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 33/3 என்ற கணக்கில் இருந்தது.

அப்போது தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா – ஜடேஜா கூட்டணி மிதமாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர்.

நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 14 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என 131 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக ஆட்டத்தில் 62 ரன்களை அசத்தியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்ககள் என இதுவரை 110 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 112 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் குலதீப் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய துருவ் ஜூரெல்3 சிக்சர்கள், 2 பௌண்டரீஸ் எடுத்து 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் அஸ்வின் 37 ரன்களிலும், பும்ரா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸ் முதல் பேட்டிங் முடிவில் இந்தியா 445 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மார்க்வுட் 4 விக்கெட்களை எடுத்துள்ளார். ரெஹான் அகமது 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஜோ ரூட், டாம் ஹார்ட்லீ, ஆண்டர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

Tags: Indiaindia cricket teamindia vs england
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Next Post

சர்பராஸ் கானிடன் தனது வருத்தத்தை தெரிவித்த ஜடேஜா!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies