விருதுநகர் வெடி விபத்து: பட்டாசு ஆலையின் மேலாளர் கைது!
Aug 21, 2025, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விருதுநகர் வெடி விபத்து: பட்டாசு ஆலையின் மேலாளர் கைது!

Web Desk by Web Desk
Feb 18, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே ராமதேவன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மருந்தில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றியது.

ஆலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், 4 அறைகள் தரைமட்டாகின.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி, அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 4 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து சம்பவம் குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. , பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஆலையின் மேலாளர் ஜெயபாலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: ArrestfirecrackersexplosionVirudhunagar
ShareTweetSendShare
Previous Post

காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா!

Next Post

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – நடந்தது என்ன?

Related News

மத்திய அரசின் பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்துார்!

பிரிட்டன் கடற்படையில் முதல் முறையாகக் கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் மதபோதகராக பணியாற்றும் பெருமையை தட்டிச்சென்ற இமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர்!

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி : சாதனை படைத்த டிஆர்டிஓ!

விருதுநகர் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ரயிலில் விழுந்து தற்கொலை!

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

22 ஆண்டுகளுக்கு பிறகு மகன் காளிதாஸுடன் நடிக்கும் ஜெயராம்!

தொடர்ந்து 3 முறை 400 கோடி ரூபாய் வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ்!

தெலங்கானா : போக்குவரத்து காவலரை மோதிய இருசக்கர ஓட்டுநர் கைது!

வளர்ப்பு நாய் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

மதுரை : இரு சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்!

தென்காசி : இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் சலசலப்பு!

கேரளாவில் அரசு மதுபான கடையில் மேலாளரின் மண்டை உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

குற்றம் புதிது படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நடிகர் ரவி மோகனின் சொத்துக்களை முடக்க மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

பாமக பிரமுகர் ராமலிங்கம் வெட்டிப் படுகொலை : NIA அதிகாரிகள் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies