அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலார் சிறையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றுள்ளார்.
கடந்த 19-ஆம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள ஐ.என்.எஸ். உட்க்ரோஷில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-க்கு மூத்த அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் போர்ட் பிளேயரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செல்லுலார் சிறைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அங்கு வைக்கப்பட்டுள்ள ஸ்வந்தந்த்ராய ஜோதியை (‘Swantantraya Jyot’) பார்வையிட்டார்.
செல்லுலார் சிறை வளாகம் மற்றும் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்தார். மேலும், செல்லுலார் சிறையில் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை பார்வையிட்டார்.