ஜம்மு காஷ்மீரில் ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
Jan 14, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் ரூ. 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி இன்று ஜம்முவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார்.

விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் ரெயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டத்தைவுயம் பிரதமர்  தொடங்கி வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1,500  அரசு ஊழியர்களுக்கு பணி நியமனகடிதங்களை விநியோகித்த மோடி, ‘விக்சித் பாரத், விக்சித் ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

மோடி திறந்து வைத்த ரயில்வே திட்டங்களில் பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தான் (48 கிமீ) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா-ஸ்ரீநகர்-பனிஹால்-சங்கல்தான் பிரிவு (185.66 கிமீ) இடையேயான ரயில் பாதையும் அடங்கும்.

பள்ளத்தாக்கில் முதல் மின்சார ரயிலையும், சங்கல்டன் மற்றும் பாரமுல்லா நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு விரிவான மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தனது அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS), விஜய்பூர் (சம்பா), ஜம்மு,  திறந்து வைத்தார்.

பிப்ரவரி 2019 இல் அவரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிறுவனம், மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. ஜம்மு விமான நிலையத்தில் புதிய டெர்மினல் கட்டிடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

40,000 சதுர மீட்டருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் புதிய முனையக் கட்டிடம், பீக் ஹவர்ஸில் சுமார் 2,000 பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடியதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.

ஜம்முவை கத்ராவுடன் இணைக்கும் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் இரண்டு பகுதிகள் (44.22 கிமீ) மற்றும் ஸ்ரீநகர் ரிங்ரோடுக்கான நான்கு வழிச்சாலைக்கான இரண்டாம் கட்டம் உள்ளிட்ட முக்கியமான சாலைத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

Tags: Viksit Jammu'PM Modijammu kashmirViksit Bharat"32000-crore worth development projects
ShareTweetSendShare
Previous Post

தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்!

Next Post

தெலுங்கானா – ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies