ஜம்மு காஷ்மீரில் ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் ரூ. 32,000 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி இன்று ஜம்முவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார்.

விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, செனாப் ரெயில்வே பாலம், தேவிகா நதிநீர் திட்டத்தைவுயம் பிரதமர்  தொடங்கி வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1,500  அரசு ஊழியர்களுக்கு பணி நியமனகடிதங்களை விநியோகித்த மோடி, ‘விக்சித் பாரத், விக்சித் ஜம்மு’ திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.

மோடி திறந்து வைத்த ரயில்வே திட்டங்களில் பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தான் (48 கிமீ) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா-ஸ்ரீநகர்-பனிஹால்-சங்கல்தான் பிரிவு (185.66 கிமீ) இடையேயான ரயில் பாதையும் அடங்கும்.

பள்ளத்தாக்கில் முதல் மின்சார ரயிலையும், சங்கல்டன் மற்றும் பாரமுல்லா நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு விரிவான மூன்றாம் நிலை சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தனது அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS), விஜய்பூர் (சம்பா), ஜம்மு,  திறந்து வைத்தார்.

பிப்ரவரி 2019 இல் அவரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நிறுவனம், மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. ஜம்மு விமான நிலையத்தில் புதிய டெர்மினல் கட்டிடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

40,000 சதுர மீட்டருக்கு மேல் பரந்து விரிந்திருக்கும் புதிய முனையக் கட்டிடம், பீக் ஹவர்ஸில் சுமார் 2,000 பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடியதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும்.

ஜம்முவை கத்ராவுடன் இணைக்கும் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையின் இரண்டு பகுதிகள் (44.22 கிமீ) மற்றும் ஸ்ரீநகர் ரிங்ரோடுக்கான நான்கு வழிச்சாலைக்கான இரண்டாம் கட்டம் உள்ளிட்ட முக்கியமான சாலைத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

Tags: PM Modijammu kashmirViksit Bharat"32000-crore worth development projectsViksit Jammu'
ShareTweetSendShare
Previous Post

தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்!

Next Post

தெலுங்கானா – ரூ.84,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies