ஆற்றுக்கால் கோவில் திருவிழா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம்!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்றுக்கால் கோவில் திருவிழா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம்!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தில் நடைபெறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் அலங்காரத்திற்காக காவி கொடிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அகற்றியதால் அங்கு போராட்டம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

இந்த ஆண்டு இந்த திருவிழாவானது பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவையொட்டி கோயிலில் காவிக்கொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அலங்காரத்திற்காக கட்டியிருந்த காவி கொடிகளை அகற்றினர்.

வார்டு கவுன்சிலர் உன்னிகிருஷ்ணன் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இடம் பெற்ற பேனர் கொண்டு அந்த காவி கோடியை அக்கட்சியினர் மறைத்தனர்.

அதில், ” ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கலையொட்டி சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2.5 கோடி நிதியுதவி வழங்கிய கேரள மாநில அரசுக்கு வணக்கம்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் கோபமடைந்த பாஜக கட்சியினர் உள்ளிட்ட இந்து பக்தர்கள், அந்த பேனரை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பதற்றம் நிலவி வந்தது.

மேலும் அந்த பேனர் கடந்த திங்கட்கிழமை அன்று அகற்றப்பட்டது. ஆனால் மறுநாளான பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று மீண்டும் அந்த பேனர் வைக்கப்பட்டது.

இதனால் கோவமடைந்த இந்து பக்தர்கள், நேற்று மாலை அந்த பேனரை கிழித்து எறிந்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது.

மோதலுக்குப் பிறகு, பல ஆர்வலர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் கோட்டை காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவிலின் சமய உற்சவத்தை அரசியலாக்கியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறிப்பாக ஆற்றுக்கால் பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் மேற்கொண்ட அறப்பணிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது போன்ற செயல்கள் கோவில் வழிபாட்டு முறைகளை நேரடியாக அவமதிப்பதாக கருதப்படுவதால் பக்தர்கள் அக்கட்சியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags: KeralaRiver Temple Festival: Marxist Communist Party anarchy!cpm
ShareTweetSendShare
Previous Post

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு குட்பை – அதிர்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி!

Next Post

புரோ கபடி : கடைசி லீக் போட்டி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies