ஆற்றுக்கால் கோவில் திருவிழா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம்!
Jun 15, 2026, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்றுக்கால் கோவில் திருவிழா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம்!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தில் நடைபெறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் அலங்காரத்திற்காக காவி கொடிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அகற்றியதால் அங்கு போராட்டம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

இந்த ஆண்டு இந்த திருவிழாவானது பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவையொட்டி கோயிலில் காவிக்கொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அலங்காரத்திற்காக கட்டியிருந்த காவி கொடிகளை அகற்றினர்.

வார்டு கவுன்சிலர் உன்னிகிருஷ்ணன் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இடம் பெற்ற பேனர் கொண்டு அந்த காவி கோடியை அக்கட்சியினர் மறைத்தனர்.

அதில், ” ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கலையொட்டி சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2.5 கோடி நிதியுதவி வழங்கிய கேரள மாநில அரசுக்கு வணக்கம்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் கோபமடைந்த பாஜக கட்சியினர் உள்ளிட்ட இந்து பக்தர்கள், அந்த பேனரை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பதற்றம் நிலவி வந்தது.

மேலும் அந்த பேனர் கடந்த திங்கட்கிழமை அன்று அகற்றப்பட்டது. ஆனால் மறுநாளான பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று மீண்டும் அந்த பேனர் வைக்கப்பட்டது.

இதனால் கோவமடைந்த இந்து பக்தர்கள், நேற்று மாலை அந்த பேனரை கிழித்து எறிந்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது.

மோதலுக்குப் பிறகு, பல ஆர்வலர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் கோட்டை காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவிலின் சமய உற்சவத்தை அரசியலாக்கியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறிப்பாக ஆற்றுக்கால் பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் மேற்கொண்ட அறப்பணிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது போன்ற செயல்கள் கோவில் வழிபாட்டு முறைகளை நேரடியாக அவமதிப்பதாக கருதப்படுவதால் பக்தர்கள் அக்கட்சியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags: cpmKeralaRiver Temple Festival: Marxist Communist Party anarchy!
ShareTweetSendShare
Previous Post

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு குட்பை – அதிர்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி!

Next Post

புரோ கபடி : கடைசி லீக் போட்டி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies