ஆற்றுக்கால் கோவில் திருவிழா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம்!
Sep 14, 2026, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆற்றுக்கால் கோவில் திருவிழா : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அராஜகம்!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 07:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள மாநிலத்தில் நடைபெறும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் அலங்காரத்திற்காக காவி கொடிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அகற்றியதால் அங்கு போராட்டம் நடந்துள்ளது.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் பொங்காலை எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

இந்த ஆண்டு இந்த திருவிழாவானது பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவையொட்டி கோயிலில் காவிக்கொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அலங்காரத்திற்காக கட்டியிருந்த காவி கொடிகளை அகற்றினர்.

வார்டு கவுன்சிலர் உன்னிகிருஷ்ணன் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இடம் பெற்ற பேனர் கொண்டு அந்த காவி கோடியை அக்கட்சியினர் மறைத்தனர்.

அதில், ” ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கலையொட்டி சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2.5 கோடி நிதியுதவி வழங்கிய கேரள மாநில அரசுக்கு வணக்கம்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் கோபமடைந்த பாஜக கட்சியினர் உள்ளிட்ட இந்து பக்தர்கள், அந்த பேனரை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பதற்றம் நிலவி வந்தது.

மேலும் அந்த பேனர் கடந்த திங்கட்கிழமை அன்று அகற்றப்பட்டது. ஆனால் மறுநாளான பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று மீண்டும் அந்த பேனர் வைக்கப்பட்டது.

இதனால் கோவமடைந்த இந்து பக்தர்கள், நேற்று மாலை அந்த பேனரை கிழித்து எறிந்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது.

மோதலுக்குப் பிறகு, பல ஆர்வலர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர் கோட்டை காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவிலின் சமய உற்சவத்தை அரசியலாக்கியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறிப்பாக ஆற்றுக்கால் பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் மேற்கொண்ட அறப்பணிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது போன்ற செயல்கள் கோவில் வழிபாட்டு முறைகளை நேரடியாக அவமதிப்பதாக கருதப்படுவதால் பக்தர்கள் அக்கட்சியின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags: KeralaRiver Temple Festival: Marxist Communist Party anarchy!cpm
Share
Tweet
SendShare
Previous Post

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு குட்பை – அதிர்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி!

Next Post

புரோ கபடி : கடைசி லீக் போட்டி!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies