இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே 1 டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது.
முதலில் இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இலங்கை அணி தொடரை வென்றது. இந்நிலையில் நேற்றோடு டி20 தொடரும் முடிவுக்கு வந்தது.
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்நிலையில் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ரன்களும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் அணி 45 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக மதீஷா பத்திரனா மற்றும் அகிலா தனஞ்சயா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
210 ரன்கள் வெற்றி என்ற இலையுடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்து 3 ரன்களில் வெற்றியை இழந்தது.
இலங்கை அணி கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில் கடைசி ஓவரில் 3 பந்துகளில் 8 ரன்களை எடுத்த இலங்கை கடைசி 3 பந்துகளில் 11 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நோ பால் போட்டார், ஆனால் அம்பயர் அதற்கு வொய்டு மட்டுமே கொடுத்த நோ பால் கொடுக்காமல் போனார். பின்னர் கடைசி பந்தில் இலங்கை நை ஒரு 6 சிக்சர் அடித்து 206 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக மெண்டிஸ் 65 ரன்களும், நிசாங்கா 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மேலும் இந்த தொடரில் இலங்கை அண்ணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்வுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் இந்த தொடரில் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.