மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா :  மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா :  மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள்  விளையாட்டு விழாவில்  மத்திய இணையமைச்சர்  எல் முருகன் பங்கேற்றார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ‘ஒருங்கிணைந்த விளையாட்டு விழா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், பார்வை திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகள், உடல் இயக்க குறைபாடு உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அவர்களுடன் பயிலக்கூடிய மாற்றுத்திறனாளி அல்லாத குழந்தைகளும் என சுமார் 900 குழந்தைகள் கலந்து கொண்டு இணைந்து உடற்பயிற்சிகளை செய்தனர்.

ஒருங்கிணைந்த கல்வி முறையின் அவசியத்தை உணர்த்தவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய திறமைகளை மற்றவர்களுக்கு காண்பிக்கும் விதமாகவும் இந்த விளையாட்டுப் போட்டி விழா நடத்தப்பட்டதாக ராமகிருஷ்ணா கல்வி நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், ‘மாற்றுத் திறனாளி குழந்தைகள் விளையாட்டில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. பிரதமர் மோடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். கிராமங்களில் இருந்து விளையாட்டு வீரர்களை அடையாளப்படுத்தும் விதமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.

அது மட்டும் இன்றி விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வரலாற்றுச் சாதனையாக இந்தியா முதல் முறையாக அதிகப்படியான பதக்கங்களை வென்றது.

இதேபோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாட்டுகளில் கலந்து கொண்டு சாதனை புரிய வேண்டும்  என தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கற்றல் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தெரப்பி சிகிச்சை முறைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

Tags: coimbatoreUnion Minister of State L MuruganSports Festival for Disabled Children
ShareTweetSendShare
Previous Post

எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் தான் : ஜான்வி கபூர்!

Next Post

ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies