உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் ஜெய்தாரா கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் கங்கை நதியில் நீராடுவதற்காக காதர்கஞ்ச் நோக்கி டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். கதாய் கிராமம் அருகே சென்ற ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த டிராக்டர் அப்பகுதியில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 20க்க்கும் மேற்பட்டடோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் இழப்பீடு அறிவித்துள்ளார்.