இமயமலையில் உடல் முழுக்க பனி போர்த்தி இருப்பது போல யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலை பிராந்திய இடங்களில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இந்த பனியாலும், குளிரின் தாக்கத்தாலும் பலரும் தவித்து வருகிறன்றனர்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் பனி படர்ந்த மலை பகுதியில் யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், பஞ்சாபை சேர்ந்த சத்யேந்திரநாத் என்ற யோகியின் ஆடை, தலைமுடி, முகம் என அனைத்தும் பனியால் மூடப்பட்டிருந்தது.
அதைப் பார்க்கும் பலராலும் அதை நம்பவே முடியவில்லை. முதலில் பலருமே அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்றே கூறினர்.
ஆனால் அந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இவர் சத்யேந்திரநாத் கவுலாந்தக் பீத் ஆசிரமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வருகிறார்.
இந்த வீடியோ, பலரை வியப்பில் ஆழ்த்தினாலும் இது உண்மை தான்.. இருப்பினும், சிறுவயதிலிருந்தே யோகா பயிற்சி செய்து வருவதால் இதெல்லாம் அவருக்குப் பெரிதாகவே தெரியாது.
ஆனாலும், இதுபோன்ற கடுமையான பனிப்பொழிவுகளுக்கு இடையே யோகா பயிற்சி செய்ய மிகக் கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது, அதைத் தான் சத்யேந்திர நாத் செய்துள்ளார்.
A meditative Yogi somewhere in the Himalayas…Om Namah Shivay 🙏 pic.twitter.com/3UrIK5ACKT
— Baba Banaras™ (@RealBababanaras) February 20, 2024