முத்துராமலிங்க தேவர் வடிவில் பிரதமர் மோடி!- அண்ணாமலை பேச்சு
Oct 6, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முத்துராமலிங்க தேவர் வடிவில் பிரதமர் மோடி!- அண்ணாமலை பேச்சு

Web Desk by Web Desk
Feb 26, 2024, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடத்தி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நாளை நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதியில் நேற்று நடைபயணத்தில் பங்கேற்றார் அண்ணாமலை. அதைத்தொடர்ந்து, மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் தேச ஒற்றுமை தென்மண்டல மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து இந்தியாவில் முதலில் குரல் கொடுத்தவர் நமது தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள். இளைஞர்களின் உந்து சக்தியாக, தேசத்திற்காக எழுச்சி மிகுந்த உரை ஆற்றுவதில் வல்லவரான தேவர் ஐயா அவர்களுக்கு, ஆங்கிலேய அரசு வாய்ப்பூட்டு சட்டம் போட்டது.

அதன் பிறகு வந்த தேர்தலில், மேடைகளில் பேசாமலேயே, ராமநாதபுரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர். சுதந்திர இந்தியாவின் முதல் இரண்டு தேர்தல்களிலும், ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறும் அளவுக்கு, மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த தலைவர்.

ஜஸ்டிஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே தலைவர் நமது தெய்வத்திருமகனார் தேவர் ஐயா அவர்கள். இன்றைய ஜாதி அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், அடாவடித்தனமான அரசியல் இந்த நான்கையும் அழிக்க, நமக்கு தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா மீண்டும் தேவைப்படுகிறார்.

அவரது ஆசீர்வாதத்தால், நாம் திராவிடக் கட்சிகளின் இந்த ஜனநாயக விரோத அரசியலை நிச்சயம் ஒழிப்போம். பாராளுமன்றத்தில் தெய்வத்திருமகனார் தேவர் ஐயா சிலை, நமது முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் ஆட்சியில், அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் 2002 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், தெய்வத்திருமகனார் தேவர் ஐயா மீது மிகுந்த பற்று கொண்டவர்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், தெய்வத்திருமகனார் தேவர் ஐயா அவர்கள் காட்டிய தேசியமும் தெய்வீகமும் சார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் ஆசிகளுடன், தமிழகமும் இம்முறை தேசியத்தின் பக்கம் நிற்கும் என்பது உறுதி எனத் தெரிவித்தார்.

Tags: PM Modibjpk annamalai
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Next Post

தமிழகத்தில் அரசியல் மாற்றம்! – அண்ணாமலை உறுதி

Related News

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies