மருத்துவர்களை மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Jan 13, 2026, 11:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவர்களை மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும், சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார்.

டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் 107-வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இன்று மருத்துவ அறிவியல் என்பது வெறும் சிகிச்சையோடு நின்றுவிடுவதில்லை. அதன் தன்மை மிகவும் விரிவடைந்துள்ளது. நான்காவது தொழிற்புரட்சி காரணமாக இயற்பியல், டிஜிட்டல் மற்றும் உயிரியல் துறைகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது.

புதிய சோதனைகள் மற்றும் மரபணு நுட்பங்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்த சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவியாக உள்ளன. ஆனால், இந்தத் தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தும் சூழலும் நிலவுகிறது. மருத்துவர்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிப்பார்கள்.

மக்கள் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள். இந்தத் தார்மீகப் பொறுப்பை மருத்துவர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். தொழில்முறைத் திறன் மற்றும் கருணை ஆகிய மதிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் கொண்டிருந்தால் மட்டுமே உண்மையிலேயே வெற்றிகரமான மருத்துவர்கள் அல்லது செவிலியர்களாக இருக்க முடியும்.

ஒரு நல்ல சுகாதார நிபுணராக இருக்க, ஒரு நல்ல மனிதராக இருப்பதும் முக்கியம் ஆகும். பண்பு இல்லாத அறிவும், மனிதநேயம் இல்லாத அறிவியலும் பாவகரமானது  என்று மகாத்மா  காந்தி கூறியதை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும் சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நார்வே அரசுடன் இணைந்து தேசிய மனித பால் வங்கி மற்றும் பாலூட்டுதல் ஆலோசனை மையம் ஆகியவற்றை நிறுவியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்கவும் இந்த மையம் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

Tags: Droupadi MurmuPresidentMEDICAL COLLEGIndia
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பு! – அண்ணாமலை

Next Post

மக்கள் கோபத்தை திசை திருப்ப முயலும் ஸ்டாலின் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies