தமிழகத்தில் உள்ள என் சகோதரிகள் மற்றும் சகோதரர்களிடம் இருந்து நான் பெற்ற பாசம் அளப்பரியது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார்.
தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி சென்ற அவர் அங்கு ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இது குறித்த தனது எக்ஸ் பதிவில்,
திருநெல்வேலியில் நடந்த மாபெரும் பேரணியின் காட்சிகள் இவை. கடந்த இரண்டு நாட்களாக, தமிழகத்தில் உள்ள என் சகோதரிகள் மற்றும் சகோதரர்களிடம் இருந்து நான் பெற்ற பாசம் அளப்பரியது.
These are glimpses from the massive rally at Tirunelveli. Over the last two days, the affection I have received from my sisters and brothers in Tamil Nadu is immense. The number of youth and women joining our programmes is tremendous. These blessings give me the strength to work… pic.twitter.com/xsPMH7QU0H
— Narendra Modi (@narendramodi) February 28, 2024
பாஜகவில் சேரும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆசீர்வாதம், மக்களுக்காக இன்னும் கடினமாக உழைக்க எனக்கு பலத்தை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.