கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! - ராஜ்நாத் சிங்
Jul 26, 2025, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! – ராஜ்நாத் சிங்

Web Desk by Web Desk
Mar 2, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார்.

கோவாவில் கடற்படை போர்க் கல்லூரியின் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2024 மார்ச் 5 அன்று திறந்து வைக்கிறார். நவீனக் கட்டிடம் சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடல்சார் பேரரசின் நினைவாக ‘சோழர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பாரதிய நௌசேனாவின் நடுத்தர மற்றும் மூத்த நிலை அதிகாரிகளுக்கு மேம்பட்ட தொழில்முறை ராணுவக் கல்வியை வழங்குவதற்காக கடற்படைப் போர்க் கல்லூரி 1988-ம் ஆண்டில் ஐ.என்.எஸ் கரஞ்சாவில் நிறுவப்பட்டது.

இந்தக் கல்லூரி 2010-ல் கடற்படை போர்க் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. 2011-ல் கோவாவில் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. உயர் ராணுவக் கல்விக்கான முதன்மையான சின்னமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற  கண்ணோட்டத்துடன், கல்லூரி செயல்படுகிறது.

ஆயுதப்படை அதிகாரிகளை உத்தி மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் தலைமைக்கு தயார்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்தக் கல்லூரி கடல்சார் பாதுகாப்பு பாடத்திட்டத்தையும் செயல்படுத்துகிறது.

இதில் நமது கடல்சார் அண்டை நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று திறந்த, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை வளர்ப்பதில் ஒத்துழைக்கிறார்கள்.

இது நமது பிரதமரின் ‘சாகர்’ தொலைநோக்கு பார்வையைப் பிரதிபலிக்கிறது. கடற்படைப் போர்க் கல்லூரி இந்தியக் கடற்படையின் போர் விளையாட்டு மற்றும் ஆர்க்டிக் ஆய்வுகளுக்கான சிறப்பு மையமாகவும் உள்ளது.

கல்வி அறிவுறுத்தல், ஆராய்ச்சி மற்றும் போர் விளையாட்டுகளுக்காக கடற்படை போர் கல்லூரியின் கட்டிடம் சோழ வம்சத்தின் கடல் வலிமையால் ஈர்க்கப்பட்டது. கட்டமைப்பின் மையத்தில்  ஒரு சுவரோவியம் உள்ளது.

இது கி.பி 1025-ல் இந்தியப் பெருங்கடலைக் கடந்து, உயர் கடல்களைக் கடந்து ஸ்ரீவிஜயப் பேரரசுக்கு சென்ற ராஜேந்திர சோழனின் பயணத்தைச் சித்தரிக்கிறது. இந்த கட்டிடத்தின் பெயர் கடந்த காலத்தில் இந்தியாவின் கடல்சார் செல்வாக்கையும், நிகழ்காலத்தில் ஒரு கடல் சக்தியாக அதன் மறுமலர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Defense Minister Rajnath SinghNAVAL WAR COOLEGE
ShareTweetSendShare
Previous Post

ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்த நிர்மலா சீதாராமன்!

Next Post

WPL : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி !

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies