கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! - ராஜ்நாத் சிங்
Apr 29, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடம் திறப்பு! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவா கடற்படை போர் கல்லூரியில் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைக்கிறார்.

கோவாவில் கடற்படை போர்க் கல்லூரியின் அதிநவீன நிர்வாகம் மற்றும் பயிற்சிக் கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2024 மார்ச் 5 அன்று திறந்து வைக்கிறார். நவீனக் கட்டிடம் சோழ வம்சத்தின் வலிமைமிக்க கடல்சார் பேரரசின் நினைவாக ‘சோழர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பாரதிய நௌசேனாவின் நடுத்தர மற்றும் மூத்த நிலை அதிகாரிகளுக்கு மேம்பட்ட தொழில்முறை ராணுவக் கல்வியை வழங்குவதற்காக கடற்படைப் போர்க் கல்லூரி 1988-ம் ஆண்டில் ஐ.என்.எஸ் கரஞ்சாவில் நிறுவப்பட்டது.

இந்தக் கல்லூரி 2010-ல் கடற்படை போர்க் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது. 2011-ல் கோவாவில் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. உயர் ராணுவக் கல்விக்கான முதன்மையான சின்னமான நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற  கண்ணோட்டத்துடன், கல்லூரி செயல்படுகிறது.

ஆயுதப்படை அதிகாரிகளை உத்தி மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் தலைமைக்கு தயார்படுத்துவது இதன் நோக்கமாகும். இந்தக் கல்லூரி கடல்சார் பாதுகாப்பு பாடத்திட்டத்தையும் செயல்படுத்துகிறது.

இதில் நமது கடல்சார் அண்டை நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று திறந்த, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை வளர்ப்பதில் ஒத்துழைக்கிறார்கள்.

இது நமது பிரதமரின் ‘சாகர்’ தொலைநோக்கு பார்வையைப் பிரதிபலிக்கிறது. கடற்படைப் போர்க் கல்லூரி இந்தியக் கடற்படையின் போர் விளையாட்டு மற்றும் ஆர்க்டிக் ஆய்வுகளுக்கான சிறப்பு மையமாகவும் உள்ளது.

கல்வி அறிவுறுத்தல், ஆராய்ச்சி மற்றும் போர் விளையாட்டுகளுக்காக கடற்படை போர் கல்லூரியின் கட்டிடம் சோழ வம்சத்தின் கடல் வலிமையால் ஈர்க்கப்பட்டது. கட்டமைப்பின் மையத்தில்  ஒரு சுவரோவியம் உள்ளது.

இது கி.பி 1025-ல் இந்தியப் பெருங்கடலைக் கடந்து, உயர் கடல்களைக் கடந்து ஸ்ரீவிஜயப் பேரரசுக்கு சென்ற ராஜேந்திர சோழனின் பயணத்தைச் சித்தரிக்கிறது. இந்த கட்டிடத்தின் பெயர் கடந்த காலத்தில் இந்தியாவின் கடல்சார் செல்வாக்கையும், நிகழ்காலத்தில் ஒரு கடல் சக்தியாக அதன் மறுமலர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Defense Minister Rajnath SinghNAVAL WAR COOLEGE
ShareTweetSendShare
Previous Post

ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்த நிர்மலா சீதாராமன்!

Next Post

WPL : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி !

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies