பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டம் சூர்பூதரை சேர்ந்தவர் முகமது ரசூல். இவர் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார்.
இதுதொடர்பாக சூர்பூர் போலீசார் 505(1)(பி) மற்றும் 25(1)(பி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்,முகமது ரசூலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.