க்ரூ-8 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளது நாசா.
நாசா க்ரூ-8 திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்களை டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A-ல் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
க்ரூ-8 திட்டத்தின் மூலம் நாசாவின் மேத்யூ டொமினிக், மைக்கேல் பாராட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகியோர் விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
இது அவர்களின் வழக்கமான பயணம் மட்டுமல்லாமல் அவர்கள் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்த உள்ளனர் என்றும் நாசா கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் விண்வெளி பற்றிய மனித புரிதலை மேம்படுத்த, பூமியில் மீண்டும் நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே உள்ள Expedition 70 மிஷன் வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் தற்போது இந்த 4 வீரர்கள் சேர்ந்து தற்போது மொத்தமாக விண்வெளி நிலையத்தில் 11 வீரர்கள் உள்ளனர்.