சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! - சேவாபாரதி வரவேற்பு!
Jun 7, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! – சேவாபாரதி வரவேற்பு!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேவாபாரதி அமைப்பு மீது அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வலாற்று சிறப்பு மிக்க தீர்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேவாபாரதி அமைப்பு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சேவாபாரதி அமைப்பு தேசிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

சுனாமி, நில நடுக்கம், பெரு வெள்ளம், கொரோனா நோய் பரவல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளித்து, அவர்களின் துயர் துடைப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

குறிப்பாக, சமுதாயத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் இலவச கல்விதான மையங்கள், சுய உதவி குழுக்கள், பண்பாட்டு வகுப்புகள் என தேசத்தில் 1.5 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளையும் சேவாபாரதி தனது ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் செய்து வருகிறது. சேவாபாரதியின் தன்னலமில்லா இந்த சேவைப் பணியை பாராட்டி, பல மாவட்ட நிர்வாகங்கள் பாராட்டு தெரிவித்து, விருதுகளை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், கடந்த 2020 -ம் ஆண்டு கொரோனா பரவல் ஊரடங்கின் போது தந்தை – மகன் என இருவர் அப்பகுதி காவல் நிலைய லாக்கப்பில் வைத்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அதில், இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சேவாபாரதி தமிழ்நாடு தொண்டு நிறுவனத்தை இணைத்து அவதூறாக செய்தி வெளியிட்டது.

லட்சக்கணக்கான மக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி பல்வேறு வகையான சேவைப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவாபாரதி மீது, உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேவா பாரதியின் மனுவை ஏற்றுக் கொண்டு மார்ச் 6 -ம் தேதி அன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் நியாயமும், ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சேவா பாரதி தமிழ்நாடு மனமார வரவேற்கிறது.

மேலும், அவதூறு பரப்பி எங்களுடைய பணிகளை முடக்க நினைக்கும் ஜனநாயக விரோத சக்திகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: The historic judgment of the Chennai High Court! - Welcome to Sevabharti!
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Next Post

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Related News

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies