சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! - சேவாபாரதி வரவேற்பு!
Jun 15, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! – சேவாபாரதி வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேவாபாரதி அமைப்பு மீது அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வலாற்று சிறப்பு மிக்க தீர்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேவாபாரதி அமைப்பு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சேவாபாரதி அமைப்பு தேசிய அளவில் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும்.

சுனாமி, நில நடுக்கம், பெரு வெள்ளம், கொரோனா நோய் பரவல் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் அளித்து, அவர்களின் துயர் துடைப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.

குறிப்பாக, சமுதாயத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் இலவச கல்விதான மையங்கள், சுய உதவி குழுக்கள், பண்பாட்டு வகுப்புகள் என தேசத்தில் 1.5 லட்சம் நிரந்தர சேவைப் பணிகளையும் சேவாபாரதி தனது ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் செய்து வருகிறது. சேவாபாரதியின் தன்னலமில்லா இந்த சேவைப் பணியை பாராட்டி, பல மாவட்ட நிர்வாகங்கள் பாராட்டு தெரிவித்து, விருதுகளை வழங்கியுள்ளன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், கடந்த 2020 -ம் ஆண்டு கொரோனா பரவல் ஊரடங்கின் போது தந்தை – மகன் என இருவர் அப்பகுதி காவல் நிலைய லாக்கப்பில் வைத்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அதில், இந்த சம்பவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத சேவாபாரதி தமிழ்நாடு தொண்டு நிறுவனத்தை இணைத்து அவதூறாக செய்தி வெளியிட்டது.

லட்சக்கணக்கான மக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்புமின்றி பல்வேறு வகையான சேவைப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவாபாரதி மீது, உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேவா பாரதியின் மனுவை ஏற்றுக் கொண்டு மார்ச் 6 -ம் தேதி அன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் நியாயமும், ஜனநாயகமும் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சேவா பாரதி தமிழ்நாடு மனமார வரவேற்கிறது.

மேலும், அவதூறு பரப்பி எங்களுடைய பணிகளை முடக்க நினைக்கும் ஜனநாயக விரோத சக்திகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: The historic judgment of the Chennai High Court! - Welcome to Sevabharti!
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Next Post

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies