சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Apr 29, 2026, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி அனைத்து சுற்றுலா சாதனைகளையும் முறியடித்து வருகிறது என்றார்.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மக்களையும் நாட்டையும் 370 வது பிரிவின் மூலம் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், தற்போது மக்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

இன்று ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது, ஏனெனில் ஜம்மு காஷ்மீர் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டுப்பாடுகளில் இருந்து இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது என்றார்.

சட்டப்பிரிவு 370ல் இருந்து ஜம்மு காஷ்மீர் பலன் பெற்றதா அல்லது சில அரசியல் குடும்பங்கள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொண்டனவா? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட உண்மை தெரிய வந்துள்ளது. இன்று சட்டப்பிரிவு 370 இல்லை, எனவே இளைஞர்களின் திறமை முழுமையாக மதிக்கப்படுகிறது. அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்று இங்கு அனைவருக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் உள்ளன என பிரதமர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து அகதிகள், வால்மீகி சமூகம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவது, எஸ்சி பிரிவினருக்கான வால்மீகி சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது, பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சட்டசபையில் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு பலனுக்கான பல சமூகங்களின் தகுதி குறித்தும் அவர் பேசினார்.

வாரிசு அரசியல், ஊழலுக்கும் ஜம்மு காஷ்மீர் பலியாகிவிட்டது. இங்குள்ள முந்தைய அரசுகள் நமது ஜம்மு காஷ்மீர் வங்கியை நாசமாக்கியுள்ளனர். தவறான நிர்வாகத்தால், வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், நீங்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான ரூபாயை இழக்கும் அபாயத்தில் உள்ளீர்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மக்களை தனது குடும்பமாக கருதுவதாக பிரதமர் கூறினார். ரம்ஜான் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் இதயத்தில் தங்கியுள்ளனர். காஷ்மீரிகளின் இதயங்களில் ‘மைன் ஹூன் மோடி கா பரிவார்’ இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகள் எந்த நிலையிலும் நிற்காது என்று உறுதியளிக்கிறேன்.

இன்னும் சில நாட்களில் ரம்ஜான் தொடங்க உள்ளது. நாட்டு மக்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நாளை, மகா சிவராத்திரியை கொண்டாடுவோம், மகா சிவராத்திரிக்கும் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM Modiprime minister narendra modijammu kashmir370 in J-KViksit Bharat Viksit Jammu Kashmir
ShareTweetSendShare
Previous Post

சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! – சேவாபாரதி வரவேற்பு!

Next Post

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies