சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சில அரசியல் குடும்ப நலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட 370-வது சட்டப்பிரிவு : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி அனைத்து சுற்றுலா சாதனைகளையும் முறியடித்து வருகிறது என்றார்.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மக்களையும் நாட்டையும் 370 வது பிரிவின் மூலம் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், தற்போது மக்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

இன்று ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது, ஏனெனில் ஜம்மு காஷ்மீர் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டுப்பாடுகளில் இருந்து இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது என்றார்.

சட்டப்பிரிவு 370ல் இருந்து ஜம்மு காஷ்மீர் பலன் பெற்றதா அல்லது சில அரசியல் குடும்பங்கள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொண்டனவா? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட உண்மை தெரிய வந்துள்ளது. இன்று சட்டப்பிரிவு 370 இல்லை, எனவே இளைஞர்களின் திறமை முழுமையாக மதிக்கப்படுகிறது. அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்று இங்கு அனைவருக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் உள்ளன என பிரதமர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து அகதிகள், வால்மீகி சமூகம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவது, எஸ்சி பிரிவினருக்கான வால்மீகி சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது, பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சட்டசபையில் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு பலனுக்கான பல சமூகங்களின் தகுதி குறித்தும் அவர் பேசினார்.

வாரிசு அரசியல், ஊழலுக்கும் ஜம்மு காஷ்மீர் பலியாகிவிட்டது. இங்குள்ள முந்தைய அரசுகள் நமது ஜம்மு காஷ்மீர் வங்கியை நாசமாக்கியுள்ளனர். தவறான நிர்வாகத்தால், வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், நீங்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான ரூபாயை இழக்கும் அபாயத்தில் உள்ளீர்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மக்களை தனது குடும்பமாக கருதுவதாக பிரதமர் கூறினார். ரம்ஜான் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் இதயத்தில் தங்கியுள்ளனர். காஷ்மீரிகளின் இதயங்களில் ‘மைன் ஹூன் மோடி கா பரிவார்’ இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகள் எந்த நிலையிலும் நிற்காது என்று உறுதியளிக்கிறேன்.

இன்னும் சில நாட்களில் ரம்ஜான் தொடங்க உள்ளது. நாட்டு மக்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நாளை, மகா சிவராத்திரியை கொண்டாடுவோம், மகா சிவராத்திரிக்கும் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM Modiprime minister narendra modijammu kashmir370 in J-KViksit Bharat Viksit Jammu Kashmir
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! – சேவாபாரதி வரவேற்பு!

Next Post

பாஜகவில் இணைந்தார் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies