கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? - அண்ணாமலை கேள்வி
Jan 14, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? – அண்ணாமலை கேள்வி

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாபர் சாதிக் விவகாரத்தில் டிஜிபி-யை பலிகடா ஆக்குவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் முயற்சிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

என்னை பொருத்தவரையில் எல்லா நாளும் பெண்கள் நாளாக தான் பார்க்கிறேன். 365 நாளும் பெண்களுக்கான நாள்தான் மகளிர் தின வாழ்த்துக்களை தனியாக தெரிவிக்க வேண்டும் என்று இல்லை ஒரு காலத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பேசியது எல்லாம் மாறி பெண்கள் தான் இந்தியாவை இன்று முன்னின்று வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு நமது நாடு மாறியுள்ளது நமது சகோதரிகள் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை பெறுவதற்காகவும் மேலும் உரிமைகளை பெற போராட்டங்கள் நடைபெற்றது அது மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது.
அப்படியே இங்கும் அது கடைபிடிக்கப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,

பிரதமரை பொறுத்த வரையில் மோடி சிலிண்டர் மூலமாக இணைப்பு பெற்றவர்களுக்கு 300 ரூபாய் மானியமாக இருந்தது 400 ரூபாயாக மாறி உள்ளது மற்றவர்களுக்கு 200 ரூபாய் மானியமாக இருந்தது 300 ரூபாயாக மாறி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டர் விலை குறைப்போம் என கூறி வந்தார்கள் ஆனால் இதுவரையில் எதுவும் குறைக்கவில்லை ஆனால் பாரத பிரதமர் தொடர்ந்து நமது தாய்மார்களுக்கு தற்பொழுதும் சிலிண்டர் விலையை குறைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

கனிமொழிக்கு அவர்களுடைய அப்பாவின் வீட்டில் உள்ளார் சொந்தமாக சம்பாதித்து காடு மேடு சென்று விவசாயம் பார்த்து சம்பாதித்தாரா? கருணாநிதியின் மகள் என்பதை வைத்து ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை அவர்கள் சொந்தமாக என்ன உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? நான்
உளைத்துக் கொண்டிருக்கிறேன், நீங்களும் உழைக்கிறீர்கள் கனிமொழி என்ன உழைக்கிறார்கள், அப்பாவின் பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார் அவர்கள் பிரதமரை பார்த்து சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என சொல்வதற்கு முன்பு ஒரு முறை கண்ணாடியில் முகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் எத்தனை வழக்குகள் உள்ளது, எத்தனை முறை சிறை சென்றுள்ளார்கள் என்பதையும் ஒரு முறை யோசிக்க வேண்டும் கனிமொழி இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.

எப்பொழுது சீனா கொடிக்காக பேச ஆரம்பித்தார்களோ அப்பொழுது அவர்கள் 200 ரூபாய் ஊப்பியாக மாறிவிட்டார்கள் யாரிடம் எப்படி பேச வேண்டும் பிரதமரை பற்றி பேசுவதற்கான அரை சதவீதம் தகுதி கூட இல்லை

டெல்லிக்கு சென்று வந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,

பாஜகவின் இறுதி பட்டியலை எடுத்துக்கொண்டு நான் டெல்லிக்கு செல்லவில்லை. கட்சி வளர்ச்சி குறித்து பேசுவதற்காக பிரதம மந்திரி நிகழ்வுக்காக போயிருக்கலாம். அதனால் என்னுடைய வேலையை நீங்கள் பார்க்க வேண்டாம். இறுதிப்பட்டியல் வெளியாகும் போது கண்டிப்பாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவிப்பேன்.

பாஜக சார்பில் சாலை வரவேற்பு ஏற்பாடு செய்யவே இல்லை இதை பாஜக பார்த்துக் கொள்ளும் அல்லது திமுக கவலைப்படும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரையுள்ளார்.

டி ஜி பி அவர்களை பலிகடா ஆக்குவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் முயற்சிக்கிறது திமுக தான் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்து கொண்டு வெளிநாட்டில் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலமாக போதை பொருளை விற்பனை செய்துள்ளார்.

இதற்கு பதில் திமுக அளிக்க வேண்டும் இதற்கு டிஜிபி ஏன் பேச வேண்டும், விலை குறைவுதான் அவ்வளவு விலையில்லை என்றெல்லாம் பேசுகிறார். இது தேவையற்றது சைலேந்திர பாபுவை இப்படித்தான் கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்ததாக பேச வைத்தார்கள். இது குறித்து திமுக நபர்கள் தான் பேச வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவு செய்து ஏன் அதை நீக்கினார் திமுகவின் அங்கத்தில் இருப்பவர்கள் நடந்த தவறு என்ன என்பதை திமுக தான் கூற வேண்டும். டிஜிபி புகைப்படம் கொடுத்தார் என எங்கும் குற்றம் சுமத்தப்படவில்லை அவர்கள் போட்டோ எடுக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை இதற்கு டிஜிபி விளக்கம் கொடுப்பதை விட திமுக தான் மக்கள் மன்றத்தில் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

இந்தியர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்: துபாயில் உள்ள இந்திய தூதரகம் தகவல்!

Next Post

மகா சிவராத்திரி : சிவபெருமானை மணலால் வடிவமைத்த சுதர்சன் பட்நாயக்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies