வாகனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்க்கை கியரையும் இந்த சாலை மாற்றும் : பிரதமர் மோடி
Jul 26, 2025, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்க்கை கியரையும் இந்த சாலை மாற்றும் : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 11, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக அரசின்  வளர்ச்சி பணிகளை பார்த்து இண்டி கூட்டணி கட்சிகள் தூக்கத்தை தொலைத்த விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டியும்  தொடங்கியும் வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த நவீன விரைவுச் சாலைக்காக டெல்லி மற்றும் அரியானா மக்களுக்கு பிரதமர்  வாழ்த்து தெரிவித்தார்.

இன்று துவாரகா விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விரைவுச் சாலைக்கு ரூ.9,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இன்று முதல், டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையிலான போக்குவரத்து ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

இந்த நவீன விரைவுச் சாலை வாகனங்களில் மட்டுமின்றி டெல்லி மக்களின் வாழ்க்கையிலும் கியர்களை மாற்றும் வகையில் செயல்படும்.

ஒரு  காலத்தில் துவாரகா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்த்து வந்தனர்.  டாக்சி ஓட்டுநர்கள் கூட இங்கு வர மறுத்து வந்தனர். இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டது. ஆனால் இன்று பல பெரிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது நான் மட்டுமே தொடங்கி வைத்த திட்டங்கள். இது தவிர, பல முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி, எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடக்கி வைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் பல மடங்கு அதிகரிக்கும். பாஜக அரசு செய்து வரும் வளர்ச்சிப் பணிகளால் காங்கிரசார் மற்றும் இண்டியா கூட்டணியினர் தூக்கத்தை இழந்துவிட்டனர். முந்தைய அரசுகள் ஒரு சிறிய திட்டத்தை துவங்கி ஐந்தாண்டுகள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டன.  துவாரகா விரைவுச்சாலை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

நாட்டில் நடைபெற்று வரும் விரைவான உள்கட்டமைப்பு பணிகள், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றும் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

Tags: PM ModiDwarka ExpresswayDelhi NCR.Delhi Gurugram on NH-48
ShareTweetSendShare
Previous Post

நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

தேர்தலுக்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை, நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் தான்! – எல். முருகன்

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies