குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!
Aug 15, 2025, 04:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவரின் விளக்கம் பெற வேண்டும் என்றும் அதுவரை தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன் கவனமாகவும் முழுமையாகவும் பரிசீலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தள்ளுபடி செய்தது. தேர்தல் பத்திரத் தகவல்களை மார்ச் 12ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும்  “கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ சமர்ப்பிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும்” என்று தெரிவக்கப்பட்டது.

இந்நிலையில், பார் கவுன்சில் தலைவர் தீர்ப்பை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கவும் மறுபரிசீலனை செய்யவும் கோரலாம் என்றும் அதுவரை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சட்ட வல்லநர்கள் கூறுகின்றனர்.

குடியரசுத் தலைவர் திரொபதி முர்மு தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கிறார். அவர் இந்தியா திரும்பியதும் இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Supreme Court Lawyers Association President's letter to the President!
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத் விடுதலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!

Next Post

ஹனுமன் படக்குழுவை பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies