முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! - மத்திய அமைச்சர் முரளீதரன்
Aug 20, 2025, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! – மத்திய அமைச்சர் முரளீதரன்

Web Desk by Web Desk
Mar 13, 2024, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் மு.க.ஸ்டாலினால் மத்திய அரசின் திட்டங்களில் ‘கமிஷன்’ பெற முடியவில்லை, அதனால் தான் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார் என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது பேசியவர்,

தமிழகத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய நிதி, முந்தைய யுபிஏ அரசு வழங்கியதை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தில் திமுக அரசும், கேரளாவில் உள்ள சிபிஎம் அரசும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்களில், ‘கமிஷன்’ பெற முடியவில்லை, அதனால் தான், மாநிலத்திற்கு நிதி ஒதுக்காததை காரணம் காட்டி, மத்திய அரசை குறை கூறி வருகிறார். இருப்பினும், மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்” என்று கூறிய முரளீதரன்,  பாஜக ஆட்சிக் காலத்தில் 1,300 கிமீ நீள ரயில் திட்டங்கள், 2,000 கிமீ ரயில் மின்மயமாக்கல், ஐந்து வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பல ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்தார். மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என திமுக அரசு குற்றம் சாட்டுகிறது.

இருப்பினும், முந்தைய UPA அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) இப்போது 282% உயர்த்தப்பட்டுள்ளது. 2010 முதல் 2015 வரை ரூ.33,581 கோடியாக இருந்த பேரிடர் நிவாரணத்துக்கான ஒதுக்கீடு, 2015-2020ல் ரூ.61,520 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, ​​1.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,” என்றார்.

இதற்கிடையில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர், போதைப்பொருள் வியாபாரிகளுடன் திமுக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

Tags: says Union Minister V MuraleedharanBJP government allotted more funds to Tamil Nadu than UPA
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ வழக்கில் திடீர் திருப்பம்!

Next Post

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies