முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! - மத்திய அமைச்சர் முரளீதரன்
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முந்தைய காங்கிரஸை விட பாஜக அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குகிறது! – மத்திய அமைச்சர் முரளீதரன்

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல்வர் மு.க.ஸ்டாலினால் மத்திய அரசின் திட்டங்களில் ‘கமிஷன்’ பெற முடியவில்லை, அதனால் தான் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார் என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது பேசியவர்,

தமிழகத்திற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய நிதி, முந்தைய யுபிஏ அரசு வழங்கியதை விட அதிகமாக உள்ளது. தமிழகத்தில் திமுக அரசும், கேரளாவில் உள்ள சிபிஎம் அரசும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்களில், ‘கமிஷன்’ பெற முடியவில்லை, அதனால் தான், மாநிலத்திற்கு நிதி ஒதுக்காததை காரணம் காட்டி, மத்திய அரசை குறை கூறி வருகிறார். இருப்பினும், மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்” என்று கூறிய முரளீதரன்,  பாஜக ஆட்சிக் காலத்தில் 1,300 கிமீ நீள ரயில் திட்டங்கள், 2,000 கிமீ ரயில் மின்மயமாக்கல், ஐந்து வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பல ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் ரூ.17,300 மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்தார். மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை என திமுக அரசு குற்றம் சாட்டுகிறது.

இருப்பினும், முந்தைய UPA அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) இப்போது 282% உயர்த்தப்பட்டுள்ளது. 2010 முதல் 2015 வரை ரூ.33,581 கோடியாக இருந்த பேரிடர் நிவாரணத்துக்கான ஒதுக்கீடு, 2015-2020ல் ரூ.61,520 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, ​​1.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,” என்றார்.

இதற்கிடையில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர், போதைப்பொருள் வியாபாரிகளுடன் திமுக தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.

Tags: BJP government allotted more funds to Tamil Nadu than UPAsays Union Minister V Muraleedharan
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ வழக்கில் திடீர் திருப்பம்!

Next Post

வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies