2024 ஐபிஎல் 2-ஆம் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் இல்லையா? வேறு எங்கு நடைபெற உள்ளது ?
Jan 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் 2-ஆம் பாதி ஆட்டங்கள் இந்தியாவில் இல்லையா? வேறு எங்கு நடைபெற உள்ளது ?

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஐபிஎல் போட்டி அட்டவணை சிக்கல்  காரணமாக ஐபிஎல் தொடரின் 2ஆம் பாதி துபாயில் நடைபெற்  வாய்ப்பு உள்ளதாக  கூறப்படுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.  முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை முழுமையாக வெளியிடாமல் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.  ஏனெனில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெறுவதால் அந்த தேதியை வைத்தே ஐபிஎல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று  மதியம் இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளது. கடந்த இரண்டு முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

அதே போல இந்த முறையும் பல கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால், எந்தெந்த தேதிகளில் எல்லாம் வாக்கெடுப்பு நடக்குமோ, அந்த தேதிகளில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம்.

தற்போது பிசிசிஐ, ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வார தேதிகளை மட்டுமே அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் 7 க்கு பிறகான ஐபிஎல் போட்டிகளின் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

அந்த சமயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்பதால் ஏப்ரல் 7 முதல் மே மாதம் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அங்கு 2024 ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

இதனால் ரசிகர்களும் சோகத்தில்  உள்ளனர். ஏனெனில் வெளிநாடுகளுக்கு சென்று ஐபிஎல் போட்டியை காண முடியாது. அதேபோல் 2019 ஐபிஎல் தொடர் நாடாளுமன்ற தேர்தலுக்கு நடுவே எந்த பிரச்சினையும் இன்றி நடந்தது போல இந்த முறையும் நடக்க வேண்டும் என்பதே ஐபிஎல் அணிகளின் எண்ணமாக உள்ளது.

Tags: Indiadubaiipl 2024stadium change
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

Next Post

தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies