தேர்தலை ED – IT கண்காணிக்கும் - தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி
Jan 14, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலை ED – IT கண்காணிக்கும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில், பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் கண்காணிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல்  ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டெல்லியில், தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், மது விநியோகம் செய்யப்படுவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சிகளோ வாக்குக்கு பணமோ அல்லது பொருளோ கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினர் கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றியும் செயலிகள் மூலம் மக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

வன்முறை இல்லாத தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ட்ரோன மூலம் மாநில எல்லைகள் முழுவதுமாக கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முழுவதுமாகக் கண்காணிக்கப்படும்.

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசில் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரையில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.

குறிப்பாக, மதரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து அரசியல் தலைவர்கள் அல்லது தனி நபர்கள் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக, தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தவே கூடாது.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுவிட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் என உறுதிப்படத் தெரிவித்தார்.

Tags: parliment electionelection commision
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் களம் 2024, மீண்டும் மோடி வேண்டும் மோடி : அண்ணாமலை

Next Post

ஒன்று முதல் ஏழு கட்டமாக 2024 தேர்தல் ! – முழு விவரம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies