தேர்தலை ED – IT கண்காணிக்கும் - தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி
Oct 26, 2025, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலை ED – IT கண்காணிக்கும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி

Web Desk by Web Desk
Mar 16, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில், பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் கண்காணிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல்  ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டெல்லியில், தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், மது விநியோகம் செய்யப்படுவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சிகளோ வாக்குக்கு பணமோ அல்லது பொருளோ கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினர் கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றியும் செயலிகள் மூலம் மக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

வன்முறை இல்லாத தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ட்ரோன மூலம் மாநில எல்லைகள் முழுவதுமாக கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முழுவதுமாகக் கண்காணிக்கப்படும்.

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசில் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரையில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.

குறிப்பாக, மதரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து அரசியல் தலைவர்கள் அல்லது தனி நபர்கள் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக, தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தவே கூடாது.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுவிட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் என உறுதிப்படத் தெரிவித்தார்.

Tags: parliment electionelection commision
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் களம் 2024, மீண்டும் மோடி வேண்டும் மோடி : அண்ணாமலை

Next Post

ஒன்று முதல் ஏழு கட்டமாக 2024 தேர்தல் ! – முழு விவரம்

Related News

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies