தேர்தலை ED – IT கண்காணிக்கும் - தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி
Jul 29, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தலை ED – IT கண்காணிக்கும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில், பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் கண்காணிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல்  ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டெல்லியில், தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து செய்தியாளர்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், மது விநியோகம் செய்யப்படுவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சிகளோ வாக்குக்கு பணமோ அல்லது பொருளோ கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினர் கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றியும் செயலிகள் மூலம் மக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

வன்முறை இல்லாத தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ட்ரோன மூலம் மாநில எல்லைகள் முழுவதுமாக கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முழுவதுமாகக் கண்காணிக்கப்படும்.

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசில் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரையில் கண்ணியத்துடன் ஈடுபட வேண்டும். சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யலாம். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்பக்கூடாது.

குறிப்பாக, மதரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விமர்சித்து அரசியல் தலைவர்கள் அல்லது தனி நபர்கள் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக, தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்தவே கூடாது.
நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததுவிட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் என உறுதிப்படத் தெரிவித்தார்.

Tags: parliment electionelection commision
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் களம் 2024, மீண்டும் மோடி வேண்டும் மோடி : அண்ணாமலை

Next Post

ஒன்று முதல் ஏழு கட்டமாக 2024 தேர்தல் ! – முழு விவரம்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies