செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்! - குடியரசுத் தலைவர்
Aug 18, 2025, 12:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Web Desk by Web Desk
Mar 19, 2024, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (எல்பிஎஸ்என்ஏஏ) 125-வது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநில குடிமைப் பணி அதிகாரிகள் நேற்று (மார்ச் 18,) குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் குடிமைப் பணி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மற்றவர்களை ஊக்குவிக்கும் என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற முறையில், நிர்வாக செயல்பாடு, அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தற்போது தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைகள் அதிகரித்துள்ளன எனவும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு சேவையையும் அவர்கள் கண்காணிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார்.

மாறிவரும் டிஜிட்டல் ஆளுகைக்கு ஏற்ப அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பும், ஒருமித்த கருத்தும் காலத்தின் தேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். குறுகிய காலத்தில் சிறந்த பலன்களை அடைவதற்கு மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளும் போது, அனைவரையும் உள்ளடக்கிய  தன்மையை அதிகாரிகள்  மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சாலையில் இருந்த குப்பைகளை அகற்றிய தமிழக பாஜக-வினர்!

Next Post

4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொலை: மகாராஷ்டிரா போலீசார் அதிரடி!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies