செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்! - குடியரசுத் தலைவர்
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (எல்பிஎஸ்என்ஏஏ) 125-வது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநில குடிமைப் பணி அதிகாரிகள் நேற்று (மார்ச் 18,) குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் குடிமைப் பணி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மற்றவர்களை ஊக்குவிக்கும் என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்ற முறையில், நிர்வாக செயல்பாடு, அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

தற்போது தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைகள் அதிகரித்துள்ளன எனவும் மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு சேவையையும் அவர்கள் கண்காணிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார்.

மாறிவரும் டிஜிட்டல் ஆளுகைக்கு ஏற்ப அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொண்டு அதற்கேற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒத்துழைப்பும், ஒருமித்த கருத்தும் காலத்தின் தேவை என்று குடியரசுத்தலைவர் கூறினார். குறுகிய காலத்தில் சிறந்த பலன்களை அடைவதற்கு மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளும் போது, அனைவரையும் உள்ளடக்கிய  தன்மையை அதிகாரிகள்  மனதில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

Tags: President Draupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

சாலையில் இருந்த குப்பைகளை அகற்றிய தமிழக பாஜக-வினர்!

Next Post

4 மாவோயிஸ்ட்டு சுட்டுக்கொலை: மகாராஷ்டிரா போலீசார் அதிரடி!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies