பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிரைப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், த.மா.கா., தலைவர் வாசன், பாம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி, அமமுக., பொதுச்செயலாளர் தினகரன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், ஐஜேகே கட்சியின் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி,

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. இந்தியாவின் பிரதமராக மோடி 3வது முறையாக வர வேண்டும். பா.ஜ., கூட்டணியில் மகிழ்வோடு பாமக இணைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆண்டுகளாக இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. டெல்லியில் தரகர்களை ஒழித்தவர் பிரதமர் மோடி.  ஊழலை ஒழித்தவர் பிரதமர் மோடி. மோடி வந்த பிறகு உலக அளவில் விளையாட்டு வீரர்கள் தங்க பதக்கங்களை வென்றனர் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய  நடிகர் சரத்குமார்,

பா.ஜ.,வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி குறித்து குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஊழலற்ற ஆட்சியாக பா.ஜ., ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. மக்கள் மத்தியில் விஷ விதைகளை விதைப்பவர்கள் தமிழகத்தின் ஆட்சியில் இருக்கிறார்கள். ராகுல் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வருங்காலத்தில் இந்தியா மேலும் வளர்ச்சி அடைய மோடியின் ஆட்சி தேவை எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய  டிடிவி தினகரன்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும்  ஒற்றுமையாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்,

10 ஆண்டுகாலமாக நல்லாட்சியை பிரதமர் மோடி தந்து கொண்டிருக்கிறார். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை இதற்கு முன்பு எந்த பிரதமரும் தரவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த நிதி தாராளமாக போதுமானது. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் ஒரே அரசாணையில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,

இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்கியே தீருவேன் என்று முழு வாழ்வையும் பிரதமர் மோடி அர்ப்பணித்து கொண்டு இருக்கிறார். சமூக நீதியின் இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர் எனத் தெரிவித்தார்.

Tags: selambjp meetingselam visit pm modi
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியாவில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழு!

Next Post

இதயம் நொறுங்கிய சூரிய குமார் யாதவ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies