தமிழிசை சௌந்தரராஜனின் ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்
ஆகியோர் முன்னிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துள்ள தமிழிசை சௌந்தரராஜனனை வரவேற்று மகிழ்கிறேன்.
தமிழக பாஜக மாநிலத் தலைவராக, மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்து, பின்னர் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக, இரண்டு மாநில அரசுகளையும் சிறப்பாக வழி நடத்திய அன்பு அக்கா தமிழிசை சௌந்தரராஜன், தனது மக்கள் பணிகளைக் களத்தில் இருந்து மீண்டும் தொடர முடிவு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்றைய தினம், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @kishanreddybjp, மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு @Murugan_MoS, பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP ஆகியோர் முன்னிலையில், கட்சியில் மீண்டும் இணைந்துள்ள அக்கா திருமதி @DrTamilisaiGuv அவர்களை வரவேற்று மகிழ்கிறேன்.… pic.twitter.com/oAP1W6HuNR
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 20, 2024
அன்பு அக்கா தமிழிசை சௌந்தரராஜனை வரவேற்பதில் பெருமை அடைவதோடு, அவரது ஆற்றல் மிகுந்த அரசியல் அனுபவங்கள், கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் துணையாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.