திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
Jan 14, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம்! – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாகவும், சைவ சமயகுரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது அங்கு நடைபெறும் ஆழித் தேரோட்டம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இந்த ஆழித்தேர். திருச்சியில் உள்ள பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் ஆழித்தேரில் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆழித்தேரின் எடை 220 டன் ஆகும். 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆழித் தேர் அலங்கரிக்கப்படுகிறது.

இதைத் தவிர, தேரின் முன்புறம் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் ஆழித்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து தேரின் மொத்த எடை 350 டன் ஆகும்.

ஆழித்தேரினை வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்ற ஐதீகமும் அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.

ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே  திருவிழா கோலம் பூண்டுள்ளது.
காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் இணைக்கப்பட்டிருந்த 500 மீட்டர் நீளமுள்ள 4 வடங்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் தேரோடும் வீதிகளில் இழுத்துச் சென்றனர். அப்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார் திருக்கூட்டத்தினர் பஞ்ச வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர்.

அப்போது, தேரை தள்ளவும், இயக்கத்தை கட்டுப்படுத்தவும் புல்டோசர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வடம் இழுக்க, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்  மிகச்சிறப்பாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.

Tags: Devotees in large numbers participate in 'Aazhi Therottam' (car festival) of Thyagaraja temple in Tamil Nadu's Tiruvarur
ShareTweetSendShare
Previous Post

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரம் : ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Related News

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies