திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
Jul 26, 2026, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம்! – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாகவும், சைவ சமயகுரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது அங்கு நடைபெறும் ஆழித் தேரோட்டம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இந்த ஆழித்தேர். திருச்சியில் உள்ள பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் ஆழித்தேரில் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆழித்தேரின் எடை 220 டன் ஆகும். 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆழித் தேர் அலங்கரிக்கப்படுகிறது.

இதைத் தவிர, தேரின் முன்புறம் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் ஆழித்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து தேரின் மொத்த எடை 350 டன் ஆகும்.

ஆழித்தேரினை வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்ற ஐதீகமும் அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.

ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே  திருவிழா கோலம் பூண்டுள்ளது.
காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் இணைக்கப்பட்டிருந்த 500 மீட்டர் நீளமுள்ள 4 வடங்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் தேரோடும் வீதிகளில் இழுத்துச் சென்றனர். அப்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார் திருக்கூட்டத்தினர் பஞ்ச வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர்.

அப்போது, தேரை தள்ளவும், இயக்கத்தை கட்டுப்படுத்தவும் புல்டோசர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வடம் இழுக்க, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்  மிகச்சிறப்பாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.

Tags: Devotees in large numbers participate in 'Aazhi Therottam' (car festival) of Thyagaraja temple in Tamil Nadu's Tiruvarur
ShareTweetSendShare
Previous Post

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரம் : ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Related News

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies