ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தலையீடு உள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுமார் 5 ஆயிரம் பேர் அதனை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டது.
அங்கு கூடியிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதல் நடத்தியது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் பயங்கரவாதிகள் என ரஷ்ய அரசின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தலையீடு உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதில் உக்ரைனின் தலையீடு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் நடத்திய பிறகு பயங்கரவாதிகள் உக்ரைனுக்குச் செல்ல முயன்றது ஏன்? என்ற கேள்விக்கு நிச்சயமாகப் பதிலளிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்ய மக்களுக்கும் எதிராக இந்த அட்டூழியத்தைச் செய்ய யாருடைய கைகள் பயன்படுத்தப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கு யார் உத்தரவிட்டது யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்று புடின் கூறினார்.