ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜ்மாதா அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். அவருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.
அப்போது மேற்கு வங்கத்தில் ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
ஊழல்வாதிகளின் சொத்துக்களை அமலாக்கத்துறை இணைத்துள்ளது. நாட்டில் ஊழலை ஒழிக்க பாஜக ஒரு புறம் உறுதி பூண்டுள்ளதாகவும், மறுபுறம் ஊழல்வாதிகள் அனைவரும் ஒருவரையொருவர் காப்பாற்றி கொள்ள ஒன்றிணைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்படவுள்ள மாற்றத்திற்காக மக்கள் வாக்களிப்பார்கள் என தான் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.