கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சியும் தடையாக உள்ளது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 19, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சியும் தடையாக உள்ளது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Mar 27, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்களுடைய போட்டி, வேட்பாளர்களுடன் கிடையாது, தமிழக வளர்ச்சியை தடுப்பவர்களுடன் தான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையில் உள்ள கோனியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

கோவை மக்களின் அன்போடு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கோவை மக்கள் அனைவரும் என் மீது அன்பை பொழிகிறார்கள். கோவையில் ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுடன் தான் பா.ஜ., போட்டி. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பா.ஜ., சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டசபையில் 3 முறை பேசியுள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக  87 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என  மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு 3முறை கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், கோவை நகர் வளர்ச்சி அடையக்கூடாது என மாநில திமுக அரசு கங்கணம் கட்டி வருகிறது. கோவை வளர்ச்சிக்கு திமுக.,வும், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.,யும் தடைக்கல்லாக இருந்தது.

தொழில்துறையினரின் கோரிக்கையை கோவை எம்.பி., பேசியிருக்கிறாரா? கோவை காவல் தெய்வம் கோனியம்மனை வணங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தேன். கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை, கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன். தொகுதி மக்களின் பிரச்சனைகளை நிச்சயம் தீர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

கரூரில் இருந்து கல்லூரி படிக்க வந்தபோது, கோவை தான் என்னை பக்குவப்படுத்தியது. இங்குள்ள 60 சதவீத மக்கள் எங்களுக்கு ஓட்டளிப்பார்கள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் என்ஐஏ காவல் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக நிச்சயம் வெற்றி பெற்று, பிரதமர் மோடி மீண்டும் 3- ஆவது முறையாக பிரதமராவார் எனத் தெரிவித்தார்.

எங்களுடைய போட்டி, வேட்பாளர்களுடன் கிடையாது, தமிழக வளர்ச்சியை தடுப்பவர்களுடன் தான் எனத் தெரிவித்தார். அனைத்து மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது. கோவை குண்டுவெடிப்பில் இந்து, கிறிஸ்டின், உள்ளிட்ட எந்த மதத்தையும் பார்க்கவில்லை அனைவரும் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தார். தீவிரவாதத்தை எந்த விதத்திலும் எதிர்க்கிறேன் எனத் தெரிவித்தார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்!

Next Post

2024 ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதல்!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் – முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்!

டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை!

எஸ்சி சான்றிதழ் முறைகேடு – தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies