தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி வாயிலாக கலந்துரையாட உள்ளேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நமோ செயலி வாயிலாக பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடுகிறார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவல்,
மக்களவைத் தேர்தலில் கடுமையாக உழைக்கும் தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் நமோ செயலி வாயிலாக ‛ எனது பூத் வலிமையான பூத்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக இன்று( மார்ச் 29) மாலை 5 மணிக்கு கலந்துரையாட காத்திருக்கிறேன்.
I look forward to ‘Enathu Booth Valimaiyana Booth’, an interaction with our hardworking @BJP4TamilNadu Karyakartas, through the NaMo App at 5 PM this evening.
It is commendable how our Karyakartas in Tamil Nadu are working among the people and ensuring that our Party’s good…
— Narendra Modi (@narendramodi) March 29, 2024
தமிழக நிர்வாகிகள் மக்கள் மத்தியில் பணியாற்றும் விதமும், பா.ஜ.க, அரசின் சாதனைகளை மாநிலம் முழுவதும் உறுதியுடன் தெரிவிப்பதும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய் உள்ளது, பாஜக கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.