கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 19, 2026, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், S.G.M.ரமேஷை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை  மேற்கொண்டார்.

அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது. இத்தனை ஆண்டுகளாக, நாகப்பட்டினம் தொகுதி வளர்ச்சியடையாமல் இருக்கக் காரணம், இங்குள்ள கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் தொகுதி, நாகப்பட்டினம். உப்பு கலந்து, குடிநீருக்குக் கூடப் பிரச்சினை இருக்கும் தொகுதி.

நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது பயணம் செய்து, தொகுதி மக்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிந்துள்ளோம்.

எனவேதான், நாகப்பட்டினம் தொகுதியை முன்னேற்ற, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, சமீபத்தில் தான் சிமெண்ட் சாலைகளையும், பல ஆயிரம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகளையும் நாகப்பட்டினம் தொகுதியில் அமைத்து கொடுத்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களை மேலும் அதிகரிக்கவே, சகோதரர்  S.G.M.ரமேஷ் அவர்களை, நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நாகப்பட்டினம் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களைக் கேட்டுப் பெறவும், விரைவுபடுத்தவும், நமது மக்களின் குரலை, நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

எனவே, பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, நாகப்பட்டினத்தில் இருந்து சகோதரர்  S.G.M.ரமேஷ் அவர்களைத், தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, கடும் உழைப்பாளிகளான நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நிச்சயம் துணை இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalaiTNBJP annamalai election campaign
ShareTweetSendShare
Previous Post

தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் முதல்வர் ஸ்டாலின்! – எல். முருகன் குற்றச்சாட்டு

Next Post

8 ஆம் நூற்றாண்டின் மார்த்தாண்ட சூரியக் கோவில் திறக்கப்படவுள்ளது!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies