கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Aug 16, 2025, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Mar 30, 2024, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், S.G.M.ரமேஷை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை  மேற்கொண்டார்.

அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது. இத்தனை ஆண்டுகளாக, நாகப்பட்டினம் தொகுதி வளர்ச்சியடையாமல் இருக்கக் காரணம், இங்குள்ள கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் தொகுதி, நாகப்பட்டினம். உப்பு கலந்து, குடிநீருக்குக் கூடப் பிரச்சினை இருக்கும் தொகுதி.

நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது பயணம் செய்து, தொகுதி மக்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிந்துள்ளோம்.

எனவேதான், நாகப்பட்டினம் தொகுதியை முன்னேற்ற, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, சமீபத்தில் தான் சிமெண்ட் சாலைகளையும், பல ஆயிரம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகளையும் நாகப்பட்டினம் தொகுதியில் அமைத்து கொடுத்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களை மேலும் அதிகரிக்கவே, சகோதரர்  S.G.M.ரமேஷ் அவர்களை, நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நாகப்பட்டினம் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களைக் கேட்டுப் பெறவும், விரைவுபடுத்தவும், நமது மக்களின் குரலை, நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

எனவே, பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, நாகப்பட்டினத்தில் இருந்து சகோதரர்  S.G.M.ரமேஷ் அவர்களைத், தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, கடும் உழைப்பாளிகளான நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நிச்சயம் துணை இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalaiTNBJP annamalai election campaign
ShareTweetSendShare
Previous Post

தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் முதல்வர் ஸ்டாலின்! – எல். முருகன் குற்றச்சாட்டு

Next Post

8 ஆம் நூற்றாண்டின் மார்த்தாண்ட சூரியக் கோவில் திறக்கப்படவுள்ளது!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies