2024 ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இன்று இரு போட்டிகள் நடைபெறுகிறது.
விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் விளையாடி உள்ளது.
இதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 10 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விசாகப்பட்டினத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதில் ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும், ஒரு போட்டியில் சேசிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசாகப்பட்டினம் மைதானத்தில் அதிகபட்சமாக 193 ரன்களும், குறைந்தபட்சமாக 147 ரன்களும் எடுத்துள்ளது. அதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இதுவரை விசாகப்பட்டினத்தில் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியும், 3 தோல்வியும் பெற்றுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்தும், ஒரு போட்டியில் சேசிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி விசாகப்பட்டினம் மைதானத்தில் அதிகபட்சமாக 167 ரன்களும், குறைந்தபட்சமாக 126 ரன்களும் எடுத்துள்ளது.
மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 57% வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 43 % வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.