டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விஸ்தாரா ரத்து செய்யப்படுத்தற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது.
விமானம் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விஸ்தாராவிடம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது.
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விஸ்தாரா, கடந்த வாரத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருக்கிறது, தாமதப்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து 15 விமானங்களும், டெல்லியில் இருந்து 12 விமானங்களும் மற்றும் பெங்களூரில் இருந்து 11 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விஸ்தாரா 50 விமானங்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான ரத்து மற்றும் நீண்ட தாமதங்கள் குறித்து விரிவான அறிக்கையை விஸ்தாராவிடம் தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கோரியுள்ளது.
முன்னதாக நேற்று விஸ்தாரா நிறுவனம் வெளியிட அதிகாரப்பூர்வ அறிக்கையில்,”கடந்த சில நாட்களாக பல்வேறு செயல்பாட்டுக் காரணங்களால் விமானம் ரத்து மற்றும் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறோம். நிலைமையைச் சீராக்க எங்கள் குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன. சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்திருந்தது.