இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16வது ஓவரில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளில் 3 போட்டியிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்றையை போட்டியில் மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.
அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோகித் சர்மா, ரசிகர்களை பார்த்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக சத்தமிடாதீர்கள் என கையசைத்து கோரிக்கை வைத்தார்.
ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து இரண்டு, மூன்று முறை கையசைத்து கோரிக்கை வைத்து ரோகித் சர்மா செய்த செயல்தான் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளது.
ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்த ரோகித் சர்மாவின் செயலை ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.