“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” - டாக்டர் மோகன் பகவத்
Mar 15, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” – டாக்டர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் நோட்டாவை புறம் தள்ளிவிட்டு, இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பகவத், நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நோட்டா உபயோகப்படுத்துவது சரியானதாக இருக்காது. இருப்பவர்களில் யார் சரியான நபரோ, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இது நோட்டா பற்றியது. அதாவது, 5 பேர் வேட்பாளர்கள். ஆனால், அதில் ஒருவரைக் கூட பிடிக்கவில்லை. இவர்களில் ஒருவரைக் கூடத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனக் கூறமுடியாது. காரணம், மக்களாட்சி முறையில் இருப்பவர்களில் சிறப்பான ஒருவரைதான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

நூற்றுக்குநூறு சிறப்பானவர்கள் என்பது கடினமான விசயம். நான் இன்றைய நிலையைப் பேசவில்லை. பண்டைய காலம் முதலே இது நடைமுறையில் உள்ளது.

பாண்டவர்கள், கௌரவர்களுக்குப் போர் என முடிவான பின்பு, சபையில் ஆலோசனை நடந்தது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்று. சிலர் பாண்டவர்கள் தரப்பில், சிலர் கௌரவர்கள் தரப்பில் நின்றார்கள்.

அப்போது, கௌரவர்களின் அறத்துக்கு எதிரான செயல்கள் பற்றி பேசியபோது, பாண்டவர்கள் அறமே வடிவெடுத்தவர்களா என்ன? எனக் கேள்வி கேட்டார்கள். யாராவது தனது மனைவியை வைத்து சூதாடுவார்களா? இவர்களும் பல தவறுகளை செய்துள்ளார்கள். இவர்களை எப்படி அறிநெறியாளர்கள் என்பது? என கேள்வி எழுப்பினர்.

பலராமர் கூறினார். நீங்கள் எல்லோருமே நிறைய விவாதிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் கூறியதையே நாம் செய்வோம் என்று. அவர் அமைதியாக இருக்கிறார். அவரிடம் கேளுங்கள் என்றார். பிறகு கிருஷ்ணரிடம் கேட்கப்பட்டது.

இதன் பிறகு கிருஷ்ணர் ராஜ்யசபையில் உரையாற்றினார். அதை அப்படித்தான் தொடங்கினார். அரசியல் என்பது எப்படிப்பட்டது என்றால், இங்கே நூற்றுக்கு நூறு சிறப்பானவர்கள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான விசயம்.

ஆனால், மக்கள் முன்பு ஒரே ஒரு மாற்றுதான் இருக்கிறது. இருப்பவர்களில் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுப்பது. பிறகு, பாண்டவர்கள் தரப்பில் தனது வாதங்களை முன்வைக்கப்பட்டன.

இப்போது, நோட்டாவை நாம் தேர்வு செய்யும்போது, சிறப்பானவர்களையும் ஒதுக்கிவிடுகிறோம். இதனால், பயன் மோசமானவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

ஆமாம், நோட்டோ என்ற வழிமுறை ஏற்பட்டு இருந்தாலும் நோட்டோவை நாம் பயன்படுத்தக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது, தீன்தயாள் ஜி போல, சுலபமாகக் கிடைத்துவிட்டால், இது நல்ல விசயம்தானே என்றார்.

Tags: mohan bagavatWe should choose the best among the candidates” - Dr. Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies