“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” - டாக்டர் மோகன் பகவத்
Sep 19, 2025, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” – டாக்டர் மோகன் பகவத்

Web Desk by Web Desk
Apr 3, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் நோட்டாவை புறம் தள்ளிவிட்டு, இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பகவத், நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நோட்டா உபயோகப்படுத்துவது சரியானதாக இருக்காது. இருப்பவர்களில் யார் சரியான நபரோ, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இது நோட்டா பற்றியது. அதாவது, 5 பேர் வேட்பாளர்கள். ஆனால், அதில் ஒருவரைக் கூட பிடிக்கவில்லை. இவர்களில் ஒருவரைக் கூடத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனக் கூறமுடியாது. காரணம், மக்களாட்சி முறையில் இருப்பவர்களில் சிறப்பான ஒருவரைதான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

நூற்றுக்குநூறு சிறப்பானவர்கள் என்பது கடினமான விசயம். நான் இன்றைய நிலையைப் பேசவில்லை. பண்டைய காலம் முதலே இது நடைமுறையில் உள்ளது.

பாண்டவர்கள், கௌரவர்களுக்குப் போர் என முடிவான பின்பு, சபையில் ஆலோசனை நடந்தது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்று. சிலர் பாண்டவர்கள் தரப்பில், சிலர் கௌரவர்கள் தரப்பில் நின்றார்கள்.

அப்போது, கௌரவர்களின் அறத்துக்கு எதிரான செயல்கள் பற்றி பேசியபோது, பாண்டவர்கள் அறமே வடிவெடுத்தவர்களா என்ன? எனக் கேள்வி கேட்டார்கள். யாராவது தனது மனைவியை வைத்து சூதாடுவார்களா? இவர்களும் பல தவறுகளை செய்துள்ளார்கள். இவர்களை எப்படி அறிநெறியாளர்கள் என்பது? என கேள்வி எழுப்பினர்.

பலராமர் கூறினார். நீங்கள் எல்லோருமே நிறைய விவாதிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் கூறியதையே நாம் செய்வோம் என்று. அவர் அமைதியாக இருக்கிறார். அவரிடம் கேளுங்கள் என்றார். பிறகு கிருஷ்ணரிடம் கேட்கப்பட்டது.

இதன் பிறகு கிருஷ்ணர் ராஜ்யசபையில் உரையாற்றினார். அதை அப்படித்தான் தொடங்கினார். அரசியல் என்பது எப்படிப்பட்டது என்றால், இங்கே நூற்றுக்கு நூறு சிறப்பானவர்கள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான விசயம்.

ஆனால், மக்கள் முன்பு ஒரே ஒரு மாற்றுதான் இருக்கிறது. இருப்பவர்களில் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுப்பது. பிறகு, பாண்டவர்கள் தரப்பில் தனது வாதங்களை முன்வைக்கப்பட்டன.

இப்போது, நோட்டாவை நாம் தேர்வு செய்யும்போது, சிறப்பானவர்களையும் ஒதுக்கிவிடுகிறோம். இதனால், பயன் மோசமானவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

ஆமாம், நோட்டோ என்ற வழிமுறை ஏற்பட்டு இருந்தாலும் நோட்டோவை நாம் பயன்படுத்தக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது, தீன்தயாள் ஜி போல, சுலபமாகக் கிடைத்துவிட்டால், இது நல்ல விசயம்தானே என்றார்.

Tags: mohan bagavatWe should choose the best among the candidates” - Dr. Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies