“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” - டாக்டர் மோகன் பகவத்
Aug 1, 2026, 02:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“தேர்தலில் இருப்பவர்களிலேயே சிறப்பானவர்களைத் தேர்வு செய்யவேண்டும்” – டாக்டர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் நோட்டாவை புறம் தள்ளிவிட்டு, இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பகவத், நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நோட்டா உபயோகப்படுத்துவது சரியானதாக இருக்காது. இருப்பவர்களில் யார் சரியான நபரோ, அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இது நோட்டா பற்றியது. அதாவது, 5 பேர் வேட்பாளர்கள். ஆனால், அதில் ஒருவரைக் கூட பிடிக்கவில்லை. இவர்களில் ஒருவரைக் கூடத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனக் கூறமுடியாது. காரணம், மக்களாட்சி முறையில் இருப்பவர்களில் சிறப்பான ஒருவரைதான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

நூற்றுக்குநூறு சிறப்பானவர்கள் என்பது கடினமான விசயம். நான் இன்றைய நிலையைப் பேசவில்லை. பண்டைய காலம் முதலே இது நடைமுறையில் உள்ளது.

பாண்டவர்கள், கௌரவர்களுக்குப் போர் என முடிவான பின்பு, சபையில் ஆலோசனை நடந்தது. யாருக்கு ஆதரவு அளிப்பது என்று. சிலர் பாண்டவர்கள் தரப்பில், சிலர் கௌரவர்கள் தரப்பில் நின்றார்கள்.

அப்போது, கௌரவர்களின் அறத்துக்கு எதிரான செயல்கள் பற்றி பேசியபோது, பாண்டவர்கள் அறமே வடிவெடுத்தவர்களா என்ன? எனக் கேள்வி கேட்டார்கள். யாராவது தனது மனைவியை வைத்து சூதாடுவார்களா? இவர்களும் பல தவறுகளை செய்துள்ளார்கள். இவர்களை எப்படி அறிநெறியாளர்கள் என்பது? என கேள்வி எழுப்பினர்.

பலராமர் கூறினார். நீங்கள் எல்லோருமே நிறைய விவாதிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணர் கூறியதையே நாம் செய்வோம் என்று. அவர் அமைதியாக இருக்கிறார். அவரிடம் கேளுங்கள் என்றார். பிறகு கிருஷ்ணரிடம் கேட்கப்பட்டது.

இதன் பிறகு கிருஷ்ணர் ராஜ்யசபையில் உரையாற்றினார். அதை அப்படித்தான் தொடங்கினார். அரசியல் என்பது எப்படிப்பட்டது என்றால், இங்கே நூற்றுக்கு நூறு சிறப்பானவர்கள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான விசயம்.

ஆனால், மக்கள் முன்பு ஒரே ஒரு மாற்றுதான் இருக்கிறது. இருப்பவர்களில் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுப்பது. பிறகு, பாண்டவர்கள் தரப்பில் தனது வாதங்களை முன்வைக்கப்பட்டன.

இப்போது, நோட்டாவை நாம் தேர்வு செய்யும்போது, சிறப்பானவர்களையும் ஒதுக்கிவிடுகிறோம். இதனால், பயன் மோசமானவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

ஆமாம், நோட்டோ என்ற வழிமுறை ஏற்பட்டு இருந்தாலும் நோட்டோவை நாம் பயன்படுத்தக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இருப்பவர்களிலேயே மிகவும் சிறப்பானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது, தீன்தயாள் ஜி போல, சுலபமாகக் கிடைத்துவிட்டால், இது நல்ல விசயம்தானே என்றார்.

Tags: mohan bagavatWe should choose the best among the candidates” - Dr. Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்வி!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies