பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் வெளியாகும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத்சிங் தனியார் ஊடகத்திற்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, தேர்தல் அறிக்கை தாயாராகி விட்டதாகவும், 6-7 நாட்களுக்குள் வெளியாகலாம் என தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை மிகவும் முக்கியமானது. வாக்குறுதிகள் அளிக்கும் எந்த அரசியல் கட்சியும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என நம்புகிறேன். அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக உள்ளதால் அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது.கடந்த 2014, 2019 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முறையும் அதனை பின்பற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்தும். ஒரு நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.