370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார்.
பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.தாக்கூரின் மகனுமான விவேக் தாக்கூரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, காங்கிரஸ் தேசியத் தலைவர் என்பது சிறிய பதவி அல்ல . ஆனால் காஷ்மீரில்டி 370வது பிரிவு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கும் அதனை இங்கு பேசுவதற்கும் என்ன பயன் என மல்லிகார்ஜுன் கார்கே கேட்கிறார். அதைக் கேட்டு நான் வெட்கப்படுகிறேன். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி இல்லையா?”
பீகாரைச் சேர்ந்த பல இளைஞர்கள் தாய்நாட்டிற்காக பெரும் தியாகங்களை செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரைக் காப்பாற்றும் முயற்சியில் எத்தனை இளைஞர்கள் தேசியக் கொடி போர்த்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்டவர்களை உங்களால் மன்னிக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கார்கேயின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு நாட்டின் பிற பகுதிகள் மீது உரிமை இருப்பது போல் ஒவ்வொரு மாநில குடிமகனுக்கும் அதன் மீது உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.