அலெக்சா மூலம் குரங்கை விரட்டிய சிறுமி : ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கிப்ட்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலெக்சா மூலம் குரங்கை விரட்டிய சிறுமி : ஆனந்த் மஹிந்திரா கொடுத்த கிப்ட்!

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேசத்தில் குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம் இருந்து, தப்பித்துக் கொள்ள கூகுள் அலெக்சாவை நாயைப் போல குரைக்க வைத்து சமயோசிதமாக செயல்பட்ட சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தனது சமூக வலைத்தளக் கணக்குகளில், ஆக்கப்பூர்வமான விஷயங்களை பதிவிடுவார்.   இவருடைய பதிவுகள் எப்போதும் தனிச் சிறப்பு வாய்ந்தது.

இவர் எளிய மனிதர்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் உயர் குணம் கொண்டவர். ஏழை குடும்பத்தில் பிறந்து சாதிக்கும் பலரை பாராட்டி, அவர்களை தன்னுடைய நிறுவனத்திலேயே பணிக்கு அமர்த்துவார்.

இந்த நிலையில், குழந்தையைத் தூக்க வந்த குரங்கிடம்  இருந்து, சமயோசிதனமாக செயல்பட்டு, குழந்தையை காப்பாற்றிய 13 வயது சிறுமிக்கு, எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தருவதாக, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில், நிகிதா என்ற 13 வயது சிறுமி, தனது அக்கா குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமி குழந்தையுடன் தனி அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சமையல் அறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. பின்னர், குழந்தையுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த அறைக்குள் குரங்கு நுழைந்தது.

அந்த நேரத்தில், குடும்பத்தினர் வேறொரு அறையில் இருந்ததால், குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.  அப்போது, குழந்தையை நோக்கி குரங்கு சென்றுள்ளது.

அச்சமயத்தில், வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா நாய் குரைப்பது போன்ற ஒலியை எழுப்பியது. இதனால், பயந்து போன குரங்கு அறையை விட்டு வெளியே ஓடியது.

இந்த நிகழ்வில் சிறுமி தனது சமயோசித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் சிறுமியை பாராட்டி வருகின்றனர்.

Tags: uttar pradeshanand mahindraOffers JobAlexamonkeybaby
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் 2024 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்!

Next Post

கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் பாஜக வெற்றி பெறும் : பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies