மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை! நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை! நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2024, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதையே தாரக மந்திரமாக 99 வருடங்களாக தன்னலமற்ற சேவையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது செய்து வருகிறது. அடுத்த ஆண்டில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது வெற்றிகரமாக அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது.

எத்தனையோ அமைப்புகள் ஆரம்பித்து அடையாளம் இல்லாமல் அழிந்து போய் உள்ளது. காரணம் அந்த அமைப்பினுடைய சித்தாந்தம் சரியில்லாமல் இருக்கும் இல்லை எனில் அதன் தலைவர்கள் சரியில்லாமல் இருப்பார்கள். இதனாலேயே பல அமைப்புகள் காணாமல் போன வரலாறு நமக்கு தெரியும்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்போ 1925 ல் ஆரம்பித்து எண்ணற்ற தடைகளையும் இன்னல்களையும் கடந்து இன்று வரை கம்பீரமாக வீறு கொண்டு நிற்கிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில்,

ஆர்எஸ்எஸ் பற்றி ஏராளமான வதந்திகளையும் அவதூறுகளையும் சமூக விரோதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சங்கம் இது போன்ற அவதூறுகளுக்கு பதிலளிப்பது இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, ஆதாரமற்ற ஒரு அவதூறைப் பரப்பியுள்ளார்.

புது தில்லியில் 3.5 லட்சம் சதுர அடியில் ரூ. 4500 கோடி செலவில் சங்கத்தின் பிரமாண்ட அலுவலகம் கட்டப்படுவதாக பொய்யான பிரசாரத்தை வாசுகி ஆரம்பித்துள்ளார்.

இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் இந்த பொய்க் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திட்டமிட்ட அவதூறைப் பரப்பும் வாசுகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கிறோம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags: RSSRSS warning to the Marxist Communist Party!
ShareTweetSendShare
Previous Post

ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

2024 ஐபிஎல் : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies