கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
Sep 9, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Apr 9, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரியும், அமலாக்க துறையின் காவலுக்கு அனுப்பியதற்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கெஜ்ரிவாலை கைது செய்ய போதுமான ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் இருப்பதாகவும்,  அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தியது நீதிமன்ற காவலில் உள்ளவர்களையும் பாதித்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமலாக்க இயக்குநரகம் சேகரித்துள்ள தகவல்கள் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் சதி செய்து, குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்துவதிலும் மறைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்  முடிவு செய்ய முடியாது.அதனை நீதிபதிகள் தான் முடிவு செய்வார்கள்.

முதலமைச்சர் என்பதற்காக தனி சலுகை வழங்க முடியாது. மக்களவை தேர்தல் பற்றி கெஜ்ரிவாலுக்கு தெரியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனால், தேர்தலை முன்னிட்டு அமலாக்க துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்ற வாதத்தை ஏற்றுக்கொள் முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அப்ரூவரின் வாக்குமூலம் மீது சந்தேகம் எழுப்புவது என்பது, நீதிபதி மற்றும் நீதிமன்றம் மீது பழிசுமத்துவது போலாகி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல எனறும், கெஜ்ரிவால்  கைது சட்டவிரோதமல்ல என கூறி  ஜாமீன் மனுவை நீதிபதிகள்  தள்ளுபடி செய்தனர்.  அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளார்.

Tags: Enforcement Directoratedelhi high courtdelhi cmDelhi CM arrestKejriwal bail
ShareTweetSendShare
Previous Post

இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!

Next Post

மக்களவைத் தேர்தல்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Related News

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies