கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரியும், அமலாக்க துறையின் காவலுக்கு அனுப்பியதற்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கெஜ்ரிவாலை கைது செய்ய போதுமான ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் இருப்பதாகவும்,  அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் காலம் தாழ்த்தியது நீதிமன்ற காவலில் உள்ளவர்களையும் பாதித்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமலாக்க இயக்குநரகம் சேகரித்துள்ள தகவல்கள் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் சதி செய்து, குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்துவதிலும் மறைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்  முடிவு செய்ய முடியாது.அதனை நீதிபதிகள் தான் முடிவு செய்வார்கள்.

முதலமைச்சர் என்பதற்காக தனி சலுகை வழங்க முடியாது. மக்களவை தேர்தல் பற்றி கெஜ்ரிவாலுக்கு தெரியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதனால், தேர்தலை முன்னிட்டு அமலாக்க துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்ற வாதத்தை ஏற்றுக்கொள் முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அப்ரூவரின் வாக்குமூலம் மீது சந்தேகம் எழுப்புவது என்பது, நீதிபதி மற்றும் நீதிமன்றம் மீது பழிசுமத்துவது போலாகி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல எனறும், கெஜ்ரிவால்  கைது சட்டவிரோதமல்ல என கூறி  ஜாமீன் மனுவை நீதிபதிகள்  தள்ளுபடி செய்தனர்.  அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிரான மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளார்.

Tags: Enforcement Directoratedelhi high courtdelhi cmDelhi CM arrestKejriwal bail
ShareTweetSendShare
Previous Post

இரண்டாம் கட்டத் தேர்தல் 1210 வேட்பாளர்கள் போட்டி!

Next Post

மக்களவைத் தேர்தல்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies